search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் கப்பல்கள் மற்றும் மீனவர்கள் நலன் கருதி புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு உள்ளது.
    • மாலத்தீவின் பரிந்துரையின்படி புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்பட உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 14-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. நேற்று அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று இரவு அது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகருகிறது. அது நாளை (17-ந்தேதி) ஒடிசா கடற்கரை பகுதியை அடைகிறது. பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசத்தை அடைகிறது. அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அப்படி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு மாலத்தீவு பரிந்துரைத்த 'மிதிலி' என்ற பெயர் சூட்டப்படுகிறது.

    அது வருகிற 18-ந்தேதி வங்காள தேசத்தில் மோங்லா - கெபுபரா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது கரையை கடக்கும்போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்யும். தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை குறையும்.

    Next Story
    ×