search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி தேச விரோதிகளுக்கு அசுரனாகவும், மக்களுக்கு நாராயணனாகவும் இருக்கிறார்: பாஜக
    X

    சி.டி.ரவி, பிரதமர் மோடி

    பிரதமர் மோடி தேச விரோதிகளுக்கு அசுரனாகவும், மக்களுக்கு நாராயணனாகவும் இருக்கிறார்: பாஜக

    • ஊழலை பஸ்மம் செய்வதற்காக பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்.
    • மதசார்பற்றவர் என தாவூத் இப்ராகிமிற்கு காங்கிரஸ் சான்றிதழ் அளிக்கலாம்.

    பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு அண்மையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. வி.எஸ்.உக்ரப்பா, பிரதமர் மோடியை பஸ்மாசுரன் என தெரிவித்திருந்தார். இது குறித்து பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் சி.டி. ரவி. செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

    ஊழல்வாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருக்கிறார். அதனால் அவர்களுக்கு பிரதமர் மோடி பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால், நாட்டு மக்களுக்கு அவர் கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார். ஊழலை பஸ்மம் செய்வதற்காக பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்.

    என்னை வகுப்புவாதி என சித்தராமையா கூறுகிறார். ஆனால் தாவூத் இப்ராகிம் போன்றவர்களை மதசார்பற்றவர் என கூறுவார். அது காங்கிரசின் மனநிலை. மதசார்பற்றவராக இருப்பதற்காக தாவூத் இப்ராகிமிற்கு காங்கிரஸ் கட்சி சான்றிதழ் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×