search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காலக்கெடு முடிகிறது.. பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை 46 லட்சம் கருத்துக்கள் வந்துள்ளன
    X

    காலக்கெடு முடிகிறது.. பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை 46 லட்சம் கருத்துக்கள் வந்துள்ளன

    • பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்றார்.
    • வரும் நாட்களில் சில அமைப்புகள் மற்றும் நபர்களை சட்ட ஆணையம் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்றார். பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது.

    இது ஒருபுறமிருக்க, பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடமும் இருந்து கருத்துகளையும், யோசனைகளையும் பெற முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி முதல் சட்ட ஆணையத்திடம் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். கருத்து தெரிவிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    இந்த காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், சட்ட ஆணையத்திற்கு இதுவரை கிட்டத்தட்ட 46 லட்சம் கருத்துக்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில், வரும் நாட்களில் சில அமைப்புகள் மற்றும் நபர்களை சட்ட ஆணையம் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×