என் மலர்
இந்தியா
- மாநிலம் முழுவதும் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
- எஸ்.டி.பி.ஐ. தலைவர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வங்கி பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சட்ட விரோத சங்கமாக அறிவித்து, உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது.
அந்த அமைப்பின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆதரவாளர்கள், தேசிய புலனாய்வு முகமையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த 6 பேர் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றது.
திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. தலைவர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வங்கி பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த தலைவர், முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட அளவிலான செயல்பாட்டாளராக பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த சோதனையில் குற்றவியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதும் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் துணை அமைப்புகளுடன் தொடர்புடைய இடங்களில் இருந்து இவை கைப்பற்றப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பு அதன் வளாகங்கள், வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி உடற்கல்வி, யோகா பயிற்சி மற்றும் அது போன்ற செயல்பாடுகள் என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
- எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
- துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆந்திராவில் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. அரவ ஸ்ரீதர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மந்திரி நடிகை ரோஜா தலைமையில் நகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜனசேனை என்றால் காமக்கொடூரன்களின் சேனை. கேரக்டர் இல்லாதவர்கள் அரசியல் செய்கிறார்கள். இது போன்ற தலைவர்களின் ஆட்சியில் மக்களுக்கு மரியாதை கிடைக்காது.
பெண்களுக்கு அநியாயம் நடந்தால் நீதி கிடைக்காது. ரெயில்வே கோடூரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுவரை அந்த எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தப் பெண் அனைத்து ஆதாரங்களையும் வீடியோ, ஆடியோ உடன் காட்டிய பிறகும் கூட விசாரணைக்காக 3 பேருடன் கூடிய ஒரு கமிட்டியை நியமிப்பதாக ஜனசேனா கட்சி அறிவித்துள்ளது வெட்கக்கேடு.
தேர்தலுக்கு முன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் 30 ஆயிரம் பெண்கள் நாடு கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை மீட்டு கொண்டு வருவோம் என்று சொன்ன பவன் கல்யாண் ஒரு பெண்ணையாவது இதுவரை கொண்டு வந்தாரா. அவரது கட்சி எம்எல்ஏக்கள் தான் பெண்கள் மீது வன்கொடுமை போன்ற அராஜகம் செய்து வருகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார்.
- இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்த தண்டாவை சேர்ந்தவர் ராமாவத் ரவி (வயது 34). இவர் சல்குனூரில் உள்ள அரசு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமிக்கு அவரது கணவரின் சகோதரி மகன் கணேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிட வேண்டும் என லட்சுமியை பலமுறை கண்டித்தனர்.
இருப்பினும் லட்சுமியின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக லட்சுமி தனது மருமகன் கணேஷ் உடன் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.
இது சம்பந்தமாக கடந்த 26-ந்தேதி காலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவி வேலைக்கு சென்று விட்டார். லட்சுமி மிரியாலகுடாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் லட்சுமி கணவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை கவனித்த ரவியின் தந்தை லட்சுமண நாயக் இது வழக்கமாக ஏற்படும் தகராறு என தூங்கிவிட்டார்.
லட்சுமி நள்ளிரவு கள்ளக்காதலனான தனது மருமகன் கணேஷை வீட்டிற்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ரவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி சென்றனர்.
காலையில் ரவியின் தந்தை லட்சுமண நாயக் எழுந்து பார்த்தபோது மகன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து லட்சுமண நாயக் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லட்சுமி தனது மருமகன் கணேஷுடன் மிரியாலகுடா போலீசில் சரணடைந்தார். இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- விபத்தில் அஜித் பவார், அவரது பாதுகாவலர் விதீப் யாதவ் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
- அதற்கு அவரது தந்தை, "சரிம்மா, வேலை முடிந்ததும் நாளை பேசலாம்" என்று பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, மும்பையில் இருந்து விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பாகத் தனது தந்தை சிவகுமார் மாலியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது.
பிங்கி தனது தந்தையிடம், "அப்பா, நான் இப்போது அஜித் பவாருடன் பாராமதிக்குச் செல்கிறேன். அவரை அங்கே இறக்கிவிட்டு, பிறகு நந்தேடுக்குச் செல்வேன். நாம் நாளை விரிவாகப் பேசலாம்" என்று கூறியுள்ளார்.
அதற்கு அவரது தந்தை, "சரிம்மா, வேலை முடிந்ததும் நாளை பேசலாம்" என்று பதிலளித்துள்ளார்.
ஆனால், அந்த நாளை இனி ஒருபோதும் வராது என்று அவரது தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
- தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் விமானம் கீழே விழுந்துவெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பு எழுவதும், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்வதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
- அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
- மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்.
இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.
- காதலனை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
- மயக்க ஊசி செலுத்தி கொலை செய்து நாடகமாடியது அம்பலம்.
காதலன் மாற்று சாதியை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நர்ஸ் தனது போற்றோரை மயக்க ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள சங்காரெட்டி மாவட்டத்தில் 23 வயதைச் சேர்ந்த பெண், நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார். சமூக வலைத்தளம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் அவர் வேறு சாதியை சேர்ந்தவர்.
இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் வேறு சாதி பையனை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோரை தீர்த்துக்கட்டினால் மட்டுமே, காதலனை திருமணம் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இதனால் தான் பணிபுரியும் மருத்துவமனையில் இருந்து மயக்க மருந்து மற்றும் ஊசி ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர், தனது பெற்றோரிடம் நைசாவ பேசி தங்களுடைய வலி நிவாரணத்திற்கான ஊசி போடுகிறேன் என்று சொல்லி மயக்க ஊசியை செலுத்தியுள்ளார். அதிக டோஸ் செலுத்தியதால் பெற்றோர்கள் மயக்க நிலையிலேயே உயிரிழந்தனர்.
பின்னர் தனது சகோதரருக்கு போன் செய்து, விவசாயக் கடன் கட்ட முடியாததால் பெற்றோர் உயிரிழந்ததாக கூறியுள்ளார். ஆனால், சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட, போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெற்றோரை கொலை செய்ததை நர்ஸ் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
- வெள்ளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருத்து.
- போலியான அல்லது தரம் குறைந்த வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டதாக சில புகார்கள் உள்ளன.
ரெயில்வே துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, தங்க முலாம் பூசிய வெள்ளிப் பதக்கம் வழங்குவது நடைமுறையாக உள்ளது. இந்த நிலையில் இனிமேல் இந்த பதக்கம் வழங்கப்படாது என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் அனைத்து மண்டல ரெயில்வேயிக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
சுற்றிக்கையில் "தற்போதுள்ள பதக்கம் வழங்கும் நடைமுறை இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் வெள்ளி பதக்கங்கள் பயனுள்ள மற்ற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை. தற்போது வெள்ளி விலை அதிகரித்துள்ளதால் செலவினத்தை கட்டுப்படுத்தவும், தரமற்ற வெள்ளி பதக்கம் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதாலும் நிறுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக தரம் குறைந்த மற்றும் போலியாக வெள்ளி வழங்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- ஆதார் சேவை மையத்தில், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இனி இருக்காது
இந்தியர்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், பான்கார்டு பெறுதல், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், செல்போன் நம்பர் வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆதாரில் மொபைல் எண்ணை எந்த நேரத்திலும் UPDATE செய்துகொள்ளும் அம்சத்தை UIDAI அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஆதார் சேவை மையத்தில், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இனி இருக்காது
ஆதார் செயலியின் மூலம் பயனர்கள் இனிமேல் எளிதாக மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ள முடியும். இன்றிலிருந்து இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
- மகாராஷ்டிரா அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
- அரசு முழு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
- கூட்டணி குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு.
டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி சந்தித்துள்ளார்.
கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எம்பி கனிமொழி, ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்
பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த மதிப்புகளை கொண்ட நோட்டுகளை பெறும் வகையில் புதிய ATM இயந்திரங்களை நிறுவ மத்திய அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.100, ரூ.500 நோட்டுக்களை கொடுத்து ரூ.10, ரூ.20, ரூ..50 நோட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்ட 'ஹைப்ரிட் ஏடிஎம்'களாக அமைக்கவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மும்பையில் அதிகப்படியான சில்லரை பரிவர்த்தனை நடைபெறும் ஒரு சில பகுதிகளில் சோதனை முறையில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.






