என் மலர்
இந்தியா
- பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
- பட்ஜெட்டின் 'B' பிரிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கலை ஒரு நாள் முன்பாக சனிக்கிழமைக்கு மாற்றினார்கள். அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.
ஆனால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முறைப்படி பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
தொடர்ச்சியாக 9-வது முறையாக பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மேலும் ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களை (9 முறை) தாக்கல் செய்தவர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது எட்டுகிறார்.
இதனிடையே, நீண்ட கால நடைமுறையை மாற்றி, பட்ஜெட்டின் 'B' பிரிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஊடுருவல் நடக்கும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கே பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது.
- ஊடுருவல்காரர்களை அவர்கள் தங்கள் வாக்கு வங்கியாக கருதுவதுதான் இதற்குக் காரணம்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் தருகிறது.
ஊடுருவல் நடக்கும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கே பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எல்லை வேலி அமைப்பதற்காக பிஎஸ்எப் படைகளுக்கு திரிணாமுல் அரசு நிலம் வழங்க மறுக்கிறது.
ஊடுருவல்காரர்களை அவர்கள் தங்கள் வாக்கு வங்கியாகக் கருதுவதுதான் இதற்குக் காரணம்.
மாநில காவல்துறை சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுப்பதில்லை. அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் நாடு முழுவதும்
அனுப்பப்படுகின்றனர்.
திரிணாமுல் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசை நிறுவ வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அரசு அமைவது மாநிலத்துக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியமானது என தெரிவித்தார்.
- நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
- தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.
இந்நிலையில், மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இன்றைய தினம் சிறப்பு வர்த்தக நாளாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ), மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அறிவித்துள்ளன. அதன்படி, இன்று காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வழக்கம்போல நடைபெறும்.
கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது
- அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
- பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் உண்மை.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2019 இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோயால் பில் கேட்ஸ் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என புதிய கோப்புகளில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு
அதேநேரம் தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பில் இடம்பெற்றுள்ள எப்ஸ்டீனின் மின்னஞ்சல் ஒன்றில், பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017 இல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "அந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் குறித்த உண்மைத் தகவலைத் தவிர, மற்ற அனைத்தும் ஒரு குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே.
இதற்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை; இதை மிகுந்த அருவருப்புடன் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- 'Cyber Bullying' அதிகரிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விளம்பரங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஊடகங்களில் ஒளிபரப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
யூனியன் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை (Survey) வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற டிஜிட்டல் பயன்பாடு சிறுவர்களின் மனநலம், கல்வித் திறன் மற்றும் சமூக நடத்தையைப் பாதிப்பதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே சமூக வலைதள போதையால் மன அழுத்தம் மற்றும் 'Cyber Bullying' அதிகரிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
சமூக வலைதளங்கள், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் ஆப்ஸ்கள் பயனர்களின் வயதைத் துல்லியமாகச் சரிபார்ப்பதை ஆன்லைன் நிறுவனங்கள் உறுதி செய்யதல், திரை நேரத்தைக் குறைக்கப் பள்ளிகளில் 'டிஜிட்டல் வெல்னஸ்' பாடத்திட்டத்தைக் கொண்டு வருதல், தினசரி உடல் உழைப்பைக் கட்டாயமாக்குதல் மற்றும் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் 'ஆஃப்லைன் யூத் ஹப்களை' உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளை ஆய்வறிக்கை வழங்கியுள்ளது.
சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறுவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதால் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இது போன்ற உணவுகளின் விளம்பரங்களுக்கு ஊடகங்களில் தடை விதிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே aasthirleut
- நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது
- அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் .
புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி நாளை (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான சுகாதார செஸ், அதிகபட்சமாக 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ரூ.2.05-8.50 வரை விலை உயர்கிறது.
கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது.
- ஜலந்தர் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சோதனை செய்தனர்.
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் புகழ்பெற்ற சீக்கிய மத வழிபாட்டுத் தலமான தேரா சச்கண்ட் பல்லானிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், இன்று (சனிக்கிழமை) தேரா சச்கண்ட் பல்லானிற்கு மற்றும் ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
இன்று விடுமுறை என்பதால் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை. ஜலந்தர் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் தேரா பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
பிரதமர் வருகையை முன்னிட்டு ஜலந்தர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேல்சபை எம்.பி.யாக சுனேத்ரா பவார் உள்ளார்.
- அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.
மராட்டிய மாநில துணை முதல்வராக இருந்த வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார்.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க-சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றுக் கொண்டார்.
மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெறுகிறார்.
62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார்.
இதை தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார்.
சுனேத்ரா பவார் துணை முதல்வராக நீடிக்கவேண்டும் என்றால் தற்போது அவர் வகித்து வரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஜித் பவரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும். அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.
- பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறையில் வைத்து 1 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
திகம்கர் மாவட்டம் பலேரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அந்த 6 வயது சிறுமியை ஆசிரியர், பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பலேரா காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போக்சோவின் கீழ் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மரக்கட்டைகளை வெட்டி 4 நாட்கள் மாட்டு சாணத்தில் ஊற வைத்தனர்.
- உடலில் காயம் அடைந்த வாலிபர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மஞ்சள் அரைத்து காயம்பட்ட இடத்தில் பூசிவிட்டனர்.
ஆந்திரா-ஒடிசா எல்லையில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக வினோத திருவிழாவை நடத்தி வருகிறார்கள். வாலிபர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மரக்கட்டைகளை வெட்டி 4 நாட்கள் மாட்டு சாணத்தில் ஊற வைத்தனர். நேற்று மலை கிராமத்தில் திருவிழா நடந்தது. சாணத்தில் ஊற வைத்த கட்டையை எடுத்து வந்து வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சிரித்தபடியே அடித்தனர்.
இந்த சம்பவத்தை ஊர் மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர். உடலில் காயம் அடைந்த வாலிபர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மஞ்சள் அரைத்து காயம்பட்ட இடத்தில் பூசிவிட்டனர்.
காயம் அடைந்த வாலிபரை அவரை தாக்கிய வாலிபர் கட்டிப்பிடித்து கை குலுக்கினர். இதனால் வாலிபர்கள் இடையே சகோதரத்துவம் அதிகரிக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
- உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
- சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வடகிழக்கு டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு இளம்பெண்ணை வஜித் என்பவர் கடந்த 2020-ம் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவருடன் ஏற்கனவே 3 மகன்கள் இருந்தனர்.
மகன்கள் உடன் இருப்பது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மகன்களை மீண்டும் விடுதியில் சேர்த்து விடுமாறு மனைவியிடம் விஜித் தகராறு செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் 7-ம் வகுப்பு படிக்கும் 2-வது மகனான அல்தமாஷ் (12) நேற்று காலையில் பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் வஜித், அல்தமாசின் மூத்த சகோதரர் அமானுக்கு போன் செய்து அல்தமாசை கொலை செய்து விட்டதாகவும் அவனது உடலை காட்டுப் பகுதியில் சென்று எடுத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
உடனே குடும்பத்தினர் பதறி அடித்து அங்கு சென்று பார்த்த போது சாலையோர புதரில் சிறுவன் அல்தமாஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது சிறுவனின் வளர்ப்பு தந்தை, பள்ளியில் இருந்து அவனை அழைத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி உள்ளார்.
மேலும் சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கொலை செய்த வஜித் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.
இது குறித்து கொலையுண்ட மகனின் தாய் கூறும்போது, தனது கணவர் மீது ஏற்கனவே குடும்ப வன்முறை புகார் அளித்ததாகவும், ஆனால் தன்னையும் தனது 3 மகன்களையும் துன்புறுத்துவதை நிறுத்துவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து, அந்தப் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 2 நாட்களுக்கு முன்பு, எங்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது நான் அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னேன். இதனால் கோபமடைந்த அவர் எனது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
- சரத் பவார் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை.
அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சரத் பவாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவார் அளித்த பதில் பின்வருமாறு:-
சுனேத்ரா துணை முதல்வரா பதவி ஏற்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. நாங்கள் செய்திகள் மூலமாக அதை தெரிந்து கொண்டோம். எனக்கும் எந்த தகவலும் தெரியாது.
பிரபுல் பட்டேல், சுனித் தட்காரே போன்றோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது குறிதது இவர்கள் முடிவு செய்வார்கள்.
தற்போது அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அஜித் பவார், ஷஷிகாந்த் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இரண்டு கட்சிகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர். இணைப்பு தேதி கூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிப்ரவரி 12-ந்தேதி இணைக்க முடிவு செய்யப்பட்டது. துரதிருஷ்டவசமாக அதற்கு முன்னதாக அஜித் பவார் காலமாகிவிட்டார்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பதுதான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித் பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.
எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித் பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.






