என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
    • மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :-

    * ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.

    * வருமான வரித்தாக்கலுக்கான அவகாச மார்ச் 31 வரை நீட்டிப்பு.

    * உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான கடன் அளவு 55.6 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    * நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வருவேன்ற என்ற வாக்குறுதி நிறைவேற்றம்.

    * மாநிலங்களுக்கான மானியமாக ரூ.1.4 லட்சம் கோடி கொடுக்கப்படும்.

    * மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் இழப்பீட்டிற்கு வரி கிடையாது.

    * பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏ.ஐ. கருவி வழங்கப்படும்.

    * மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக குறைப்பு.

    * வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும்.

    • 3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்படும்.
    • ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பின்வருமாறு:-

    * பெண் கல்வியை ஊக்குவிக்க நாடு முழுவதும் மாவட்டந்தோறும் பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.

    * இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஷி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

    * 5 பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்படும்.

    * கால்நடை கல்வி நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

    * 15 ஆயிரம் இடைநிலை பள்ளிகளில் கற்பனை திறன் சார்ந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    * இந்தியாவில் டிசைனர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால் அதை சரி செய்ய புதிய வடிவமைப்பு துறைக்கான மையம் அமைக்கப்படும்.

    * 3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்படும்.

    * ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    * அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள், பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

    * ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும்.

    * ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிப்பதற்காக 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள்.

    * உத்தரகாண்ட், இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் மலை ரெயில் சேவை மேம்படுத்தப்படும்.

    * முக்கிய நகரங்களில் தலா ரூ.5000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். 

    • பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
    • வங்கித்துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

    2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.

    இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.

    எலக்ட்ரானிஸ் துறையில் ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ. 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரி மருத்துவத் திட்டத்தை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்கள் துறை வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மெகா ஜவுளி பூங்காக்கங்கள் அமைக்கப்படும். உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டங்கள் இதில் அடங்கும்.

    குறு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2000 கோடி நிதியில் திட்டம், கன்டெய்னர்களை உற்பத்தி செய்ய ரூ. 10,000 கோடியில் 5 ஆண்டு திட்டம், முக்கிய நகரங்களில் தலா ரூ.5000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், நகராட்சி பண பத்திரம் வெளியிட்டு நிதி திரட்ட ரூ.100 கோடியில் திட்டம், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை 2047க்குள் 12 சதவீதமாக உயர்த்த திட்டம் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர்த்து மாநிலங்களுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள், செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம், அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்ய வழித்தடம் திட்டம், விளையாட்டு சாதனங்களை உற்பத்தி செய்ய பிரத்யேக திட்டம், பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க 200 பிரத்யேக பூங்காக்கள் , வங்கித்துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐதராபாத்- சென்னைக்கு, பெங்களூரு- சென்னைக்கு 7 அதிவேக ரெயில் வழித்தடம்.
    • புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.

    புதுடெல்லி:

    2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பின்வருமாறு:-

    * காதி, கைத்தறி கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

    * தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்.

    * நாடு முழுவதும் 7 நகரங்களுக்கு இடையே அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்கப்படும்.

    * ஐதராபாத்- சென்னைக்கு, பெங்களூரு- சென்னைக்கு 7 அதிவேக ரெயில் வழித்தடம்.

    * தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும்.

    * கடலோர சரக்கு போக்குவரத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.

    * இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்கும் வகையில் புதிய திட்டம்.

    * நகர் அடிப்படையிலான வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு.

    * புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.

    * மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.

    * வங்கி துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது.

    * சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகம். புதிய திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

    • வளர்ச்சியின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்.
    • ஜிஎஸ்டி சீர்திருத்தம், லேபர் கோட் சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியவதாவது:-

    * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது.

    * இளைஞர் சக்தியை முன்னிறுத்தி 2026- 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * வளர்ச்சியின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்.

    * 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 350 சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.

    * அனைவருக்குமான வளர்ச்சி, நிலையான பொருளாதாரம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஆகிய மூன்றும் முக்கிய கடமை.

    * மிக முக்கியமாக ஜிஎஸ்டி சீர்திருத்தம், லேபர் கோட் சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது.
    • உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

    புதுடெல்லி:

    2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியவதாவது:-

    * புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்.

    * பிரதமர் மோடி தலைமையிலான அரசு 12 ஆண்டுகளில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளது.

    * தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்.

    * பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.

    * தடைகளைத் தாண்டி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

    * பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம்.

    * இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது.

    * உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

    * வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் முன்னேற்றம் காணப்படும், தைரியமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றார். 

    • இது மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தில் இரண்டாவது பட்ஜெட்டாகும்.
    • இந்த சுருக்கமான உரை சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையாக உள்ளது.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டிற்கான தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இது மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தில் இரண்டாவது பட்ஜெட்டாகும். விவசாயிகள், பெண்கள், வரி செலுத்துவோர் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    மக்களவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் அதன்மீது உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நாட்டில் இதுவரை மிக குறைந்த நேரம் நிகழ்த்தப்பட்ட பட்ஜெட் உரை குறித்த சுவாரஸ்ய தகவல் கவனம் பெற்றுள்ளது.

    முன்னாள் நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் 1977 ஆம் ஆண்டு மிகக் குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் 800 வார்த்தைகளைக் கொண்ட இடைக்கால பட்ஜெட்டை வழங்கினார். இந்த சுருக்கமான உரை சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையாக உள்ளது.

    மறுபுறம், மிக நீண்ட உரை நிர்மலா சீதாராமனால் நடத்தப்பட்டது. பிப்ரவரி 1, 2020 அன்று அவர் 2:40 மணி நேர உரையை நிகழ்த்தினார்.

    • சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
    • தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.

    இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

    இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் அதன் மீது உரையாற்றி வருகிறார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

    • நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.
    • காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மேலும் ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களை (9 முறை) தாக்கல் செய்தவர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது எட்டுகிறார்.

    இதனிடையே, தமிழ்நாட்டை சேர்ந்தவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போது கையால் நெய்யப்பட்ட புடவைகளை அணிவதை பராம்பரியமாக கடைப்பிடித்து வருகிறார்.

    அந்த வகையில் இன்று 2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்காக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் இருந்து கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலையை அணிந்து உள்ளார்.

    பளபளப்பான பட்டு மற்றும் சிக்கலான கைவினைக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் புடவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான கைத்தறிகளில் ஒன்றாகும்.

     

    2019-ம் ஆண்டு தனது முதல் பட்ஜெட் தாக்கலின் போது கைத்தறி புடவையை அணிந்து இருந்தார்.

     

    2020ம் ஆண்டு பட்டு சேலை

     2021-ம் ஆண்டு போச்சப்பள்ளி புடவை

     2022-ம் ஆண்டு ஒடிசாவின் போம்காய் புடவை.

     2023-ம் ஆண்டு கர்நாடகாவின் இல்கல்

     2024-ம் ஆண்டு மங்களகிரி பட்டு

     2024-ம் ஆண்டு இடைக்கால அமர்வுக்கு காந்தா எம்பிராய்டரி கொண்ட பட்டு சேலை

      2025-ம் ஆண்டு பத்மஸ்ரீவிருது பெற்ற துலாரி தேவி பரிசளித்த தந்தம் கொண்ட மதுபானி கையால் வரைந்த புடவையை அவர் அணிந்திருந்தார். 

    • ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
    • இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட்.

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.

    அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    • விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.
    • சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. கட்சி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.

    சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.
    • கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தது. அப்போது முதல் சிகரெட், புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்டவை பாவ பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு (2025) இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புகையிலை உள்ளிட்ட பாவ பொருட்களுக்கான வரி திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டு (2026) பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சிகரெட், புகையிலைப் பொருட்கள், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால் வரியுடன் கூடிய 40 சதவீத ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இப்புதிய முறைப்படி பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு ஜி.எஸ்.டி. வரி கணக்கிடப்படவுள்ளது.

    பான் மசாலா உற்பத்தியாளர்கள், இன்று முதல் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து பேக்கிங் எந்திரங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும். அந்த காணொலிப் பதிவுகளை குறைந்தது 24 மாதங்கள் பாதுகாக்க வேண்டும்.

    சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ரூ.2.10 முதல் ரூ.8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ. நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு ரூ.2.10 வரையிலும், 70 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 4 ரூபாயும், 75 மி.மீ நீளமுள்ள சிகரெட் ஒன்றுக்கு 5.4 ரூபாய் அளவிலும் உயர்த்தப்படுகிறது. இது புதிதாக அமல்படுத்தப்படவுள்ள 40 சதவீத ஜி.எஸ்.டி. வரியை தவிர்த்து விதிக்கப்படும்.

    மென்று தின்னும் புகையிலைக்கு 82 சதவீதம் கலால் வரியும் குட்காவுக்கு 91 சதவீதம் கலால் வரியும் பான் மசாலாவுக்கு 88 சதவீதம் கலால் வரிவிதிக்கப்பட உள்ளது. கிரிசில் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, கூடுதல் கலால் வரி விதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம்வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×