என் மலர்tooltip icon

    இந்தியா

    • சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?
    • டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.

    தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    * அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?

    * சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?

    * சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?

    * மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    * மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.

    ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.

    அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    • ஏடிஜிபி பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்
    • ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

    தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பூரன் குமாரின் மனைவி அம்னீத் குமார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தற்கொலை செய்துகொண்ட ஏடிஜிபி பூரன் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சாதி ரீதியான துன்புறுத்தல் காரணமாக ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சண்டிகரில் உள்ள பூரன் குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதுபோன்ற சம்பவங்கள் நாட்டிலும் சமூகத்திலும் படிந்துள்ள கறையாகும். மேலும் தாழ்த்தப்பட்டோர் நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்பதற்கு இது சான்றாகும்.

    பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பு மற்றும் மனுவாத சிந்தனை மனிதநேயம் இறந்துபோகும் அளவுக்கு சமூகத்தை விஷமாக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    • கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த பையில் வைர கற்கள் வரிசையாக அடுக்கி மிளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரபல தொழில் அதிபரும் இந்திய ஆடை வடிவமைப்பாளருமான மணிஷ் மல்கோத்ரா மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தீபாவளி விருந்து வைத்தார். இதில் நீதா அம்பானி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதா அம்பானி விலை உயர்ந்த வெள்ளி சேலை அணிந்து வந்திருந்தார். அவருடைய காதில் பெரிய மரகத காதணிகள் மற்றும் கையில் விலை உயர்ந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஒன்றை வைத்திருந்தார்.

    சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்த விழாவில் நீதா அம்பானி அணிந்திருந்த சேலை மற்றும் கைப்பை அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்திருந்த சேலையில் இருந்த வெள்ளி ஜரிகை ஜொலித்தது. அவருடைய காதில் அணிந்திருந்த மரகத காதணி அதற்கு ஏற்றார் போல இருந்தது.



    இதற்கு மேலாக அவர் வைத்திருந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஆடம்பரமாக ஜொலித்தது. அதன் விலை 2 மில்லியன், தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 17 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 200 ஆகும். இது போன்ற விலை உயர்ந்த பைகள் உலகில் 3 பேரிடம் மட்டுமே உள்ளது. அதில் நீதா அம்பானியும் ஒருவர். இந்த கைப்பையில் 3ஆயிரத்து 25 வைரக் கற்கள் உள்ளன. கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த பையில் வைர கற்கள் வரிசையாக அடுக்கி மிளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். சினிமா பிரபலங்களையும் மிஞ்சும் அளவில் வெள்ளி சீக்வின் சேலை மற்றும் வைர கற்களால் ஆன கைப்பையுடன் வலம் வந்த நீதா அம்பானி படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.



    • தலித் ஐபிஎஸ் அதிகாரி மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்.
    • ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

    தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    • பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
    • தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெறவேண்டும்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரங்களுக்கு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) சான்றிதழ் பெறவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து சான்றிதழ் பெறாமல், சமூக ஊடக வலைத்தளங்கள் உட்பட, எதிலும் அரசியல் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வேட்பாளர்கள் தங்கள் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் குறித்து வேட்புமனு தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
    • பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான சில நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கூடுதல் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    • ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
    • நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.

    ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.

    அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.

    ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.

    வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.  

    • ஆய்வில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது என கூறி இருந்தார்
    • நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியின் கீழ் உள்ள மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது" என கூறி இருந்தார்

    இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் ராகுல் காந்தி சுட்டிக்காட்டிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ரோகித் பாண்டே என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று மனுதாரர் வாதிட்டார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "இதுபோன்ற அரசியல் விவகாரங்களுக்காக நீதிமன்றங்களை மேடையாக்காதீர்கள். உங்கள் புகாரை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று கூறி வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    • 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.
    • டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.

    எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்காவில் இருந்து கிளம்பிய டிரம்ப் முன்னதாக இஸ்ரேல் சென்றார்.

    எகிப்துக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி 24 மணி நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.

    இதற்கிடையே இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு டிரம்ப்-ஐ பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் பேசிய வீடியோவை பகிர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முறை இந்தியாவை ஆபரேஷன் சிந்தூரை திடீரென நிறுத்த கட்டாயப்படுத்த வரிகளைப் பயன்படுத்தியதாக டிரம்ப் கூறுவது 51வது முறையாகும். டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.

    காசா தொடர்பாக அவர் மேற்கொண்ட அமைதி முயற்சிகளைப் பாராட்டும்போது நமது பிரதமர் அதேவேளையில் இதுகுறித்து தொடர்ந்து அமைதியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.  

    • அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
    • கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், கிணற்றில் குதித்த ஒரு பெண்ணை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

     நேற்று, அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.

    மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் தீயணைப்பு அதிகாரி சோனி எஸ். குமார் இறங்கினார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகள் கிணற்றுக்குள் இருந்த சோனி எஸ். குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. மேலும், கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.

    மற்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.
    • இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் கோட்டயம் மாவட்டம் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.

    இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அனந்து அஜித் தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.

    நான் மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதவில், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். தனது தற்கொலைச் செய்தியில், ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் தான் மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் ஆனந்து அஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    தான் மட்டும் பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும், ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறினார். உண்மையாக இருந்தால், இது பயங்கரமானது.

    இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த முகாம்களில் கலந்து கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும்.

    சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகம் போலவே, சிறுவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகமும் சமூகத்தில் பரவியுள்ள பெரும் சாபக்கேடாகும்.

    இந்தச் சொல்லப்படாத கொடூரமான குற்றங்களைச் சுற்றியுள்ள மௌனத்தின் திரை கிழிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.     

    • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த்  இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார். 

    இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதவில், "கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. அனிதா ஆனந்த் அவர்களை வரவேற்றேன்.

    பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழுமைக்காக வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜெய்சங்கரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அனிதா ஆனந்த் கூறும்போது, "இந்தியா- கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்" என தெரிவித்திருந்தார்.  

    ×