என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    • நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
    • பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான சில நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கூடுதல் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    Next Story
    ×