என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஊழியரை பணி நீக்கம் செய்த பெண், ஆத்திரத்தில் தீ வைத்த ஊழியர்- இருவரும் மரணம்
Byமாலை மலர்27 April 2022 5:48 AM GMT (Updated: 27 April 2022 5:48 AM GMT)
இருவரையும் காப்பாற்ற சென்ற நபர் மீதும் தீப்பரவி அவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
புனே:
புனேவை சேர்ந்த பெண் ஒருவர் தையல் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் மிலிந்த் நாத்சாகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 நாட்களுக்கு முன்பு மிலிந்தை அந்த பெண் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மிலிந்த் நேற்று இரவு 11 மணி போல கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் பெட்ரோலை எடுத்து அவரது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீப்பற்றிய அந்த பெண் ஓடி சென்று ஊழியரை கட்டிப்பிடிக்க அவருக்கும் தீப்பரவியது. இந்த சம்பவத்தை அருகில் செல்போன் கடை வைத்திருந்த நபரும் பார்த்து அவர்களை காப்பாற்ற சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மீதும் தீப்பரவியது.
இந்த சம்பவத்தில் மிலிந்தும், அவரை பணியில் இருந்து நீக்கிய பெண்ணும் உடல் கருகி உயிரிழந்தனர். காப்பாற்ற சென்ற நபர் 35 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X