என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தவறானது- மத்திய நிதி மந்திரி விளக்கம்
Byமாலை மலர்26 March 2022 2:14 AM GMT (Updated: 26 March 2022 7:15 AM GMT)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புது தில்லி:
நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் முடிவடைந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்காகவே மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்ததாகவும், தற்போது தேர்தல் முடிவடைந்ததால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அவர், எரிபொருள் விலை உயர்வு ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களுடன் தொடர்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் ரஷியா மேற்கொண்டுள்ள போர் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த போரால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரிய நாடுகளிடையே நடைபெற்ற போரால் இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியிருந்ததை ஏற்க முடியும் என்றால், தற்போதைய சூழ்நிலையை நாங்கள் ஏன் கூற கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரத்தில் அரசியல் செய்வதையும் எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவின்படி ஒவ்வொரு மாநிலமும் இழப்பீடு பெறுகிறது என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...
தமிழகத்தில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை 76 பைசா உயர்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X