என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பிப்ரவரி மாதம் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.79.34 கோடி
Byமாலை மலர்5 March 2022 5:11 AM GMT (Updated: 5 March 2022 5:11 AM GMT)
பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் ேகாவில் உண்டியல் வருமானமாக ரூ.79.34 கோடி கிடைத்தது. 10 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவலுக்கு முன்பு தினமும் லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தைத் தொடங்கி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.79 கோடியே 34 லட்சம் கிடைத்தது. 5 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 13 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் அறைகள் ஒதுக்கீடு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.76 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு 64 லட்சத்து 90 ஆயிரம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 378 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவலுக்கு முன்பு தினமும் லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தைத் தொடங்கி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.79 கோடியே 34 லட்சம் கிடைத்தது. 5 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 13 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் அறைகள் ஒதுக்கீடு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.76 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு 64 லட்சத்து 90 ஆயிரம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 378 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X