என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பண மோசடி வழக்கில் மும்பை தொழில் அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை
Byமாலை மலர்3 Feb 2022 6:16 AM GMT (Updated: 3 Feb 2022 6:16 AM GMT)
ரூ.1,034 கோடி பண மோசடி தொடர்பாக மும்பை தொழில் அதிபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மும்பை:
குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரவீன் ரவுத். இவரது நிறுவனம் மும்பை புறநகரான கோரேகான் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டது.
அவரது நிறுவனம் ரூ.1,034 கோடி நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பல்வேறு பில்டர்களிடம் இருந்து பெறப்பட்ட 1,034 கோடிக்கு கூடுதலாக வங்கி கடனையும் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
ரூ.1,034 கோடி பண மோசடி தொடர்பாக மும்பை தொழில் அதிபர் பிரவீன் ரவுத்திடம் அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பிறகு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பின்னர் பிரவீன் ராவத்தை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் வருகிற 9-ந் தேதி வரை விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரவீன் ரவுத். இவரது நிறுவனம் மும்பை புறநகரான கோரேகான் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டது.
அவரது நிறுவனம் ரூ.1,034 கோடி நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பல்வேறு பில்டர்களிடம் இருந்து பெறப்பட்ட 1,034 கோடிக்கு கூடுதலாக வங்கி கடனையும் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
ரூ.1,034 கோடி பண மோசடி தொடர்பாக மும்பை தொழில் அதிபர் பிரவீன் ரவுத்திடம் அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட பிறகு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பின்னர் பிரவீன் ராவத்தை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் வருகிற 9-ந் தேதி வரை விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X