என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குடியரசு தின கொண்டாட்டம் ஜனவரி 23-ந்தேதியில் இருந்து தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்15 Jan 2022 10:10 AM GMT (Updated: 15 Jan 2022 10:10 AM GMT)
இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் தேதி மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜனவரி 24-ந் தேதி முதல் தொடங்கும்.
தலைநகர் டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி கோலாகலமாக குடியரசு தின விழா நடைபெறும். இதில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் தேதி மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 24-ந் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்பு ஜனவரி 23-ந்தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாளையும் சேர்த்து கொண்டாடும் வகையில் சுதந்திர தின கொண்டாட்டம் தேதியை ஒரு நாள் முன்னதாக மாற்றி அமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X