என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ராஜஸ்தான் சிறுமி பலாத்கார வழக்கு- ஆதாரங்கள் கிடைக்கவில்லை என போலீஸ் தகவல்
Byமாலை மலர்15 Jan 2022 1:58 AM GMT (Updated: 15 Jan 2022 1:58 AM GMT)
சிறுமி மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
ஜெய்பூர்:
கடந்த ஜனவரி 13-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா மேம்பாலத்தில், மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கியெறியப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டறியப்பட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து அதிக ரத்தபோக்கு காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த ராஜஸ்தான் மாநில சிவில் உரிமைகள் டி.ஐ.ஜி ரவி கூறியதாவது:-
சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சிறுமி வீட்டில் இருந்து கிளம்பி மேம்பாலம் வரும் வரை உள்ள அனைத்து இடங்களின் சிசிடிவி வீடியோக்களையும் ஆய்வு செய்தோம்.
அதில் அந்த சிறுமி நல்லபடியாகதான் இருக்கிறார். அவர் மேம்பாலத்தில் இருந்த 5-7 நிமிடங்களில் தான் அந்த சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும்.
நாங்கள் வேறு கோணத்தில் இருந்து இந்த வழக்கை ஆராய தொடங்கியிருக்கிறோம். ஆனால் பாலியல் பலாத்காரத்திற்கான சாத்தியக்கூறு குறைவாகவே இருக்கிறது.
இவ்வாறு ரவி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X