search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்
    X
    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்

    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா 3-வது அலைக்கு நாடு முழுவதும் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா 3-வது அலைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லேசான அறிகுறிகளே உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், சமீபத்தில்  தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×