search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா தடுப்பு நடவடிக்கை- பிரதமர் மோடி இன்று ஆலோசனை

    மும்பையில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பிரதமருடனான ஆய்வு கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படுகிறது.
    மும்பை:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை,. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது.  

    இந்நிலையில் இன்று மாலை கொரோனா பாதிப்பு நிலைமை குறித்து மறு ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் நிலைமை குறித்து பிரதமர் ஆய்வு செய்கிறார். 

    மகாஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாக  மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். மும்பையில் கொரோனா அதிகரித்தாலும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும்,  எனினும் பிரதமருடனான ஆய்வு கூட்டத்திற்கு பிறகு இறுதி  முடிவு எடுக்கப்படலாம் என்று மேயர் கிஷோரி குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×