என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் மணல் சிற்பம்
Byமாலை மலர்7 Jan 2022 3:24 AM GMT (Updated: 7 Jan 2022 3:24 AM GMT)
அரசு அறிவிக்கும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
பூரி:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், இந்திய அளவில் மிக சிறந்த மணல் சிற்பக் கலைஞராக திகழ்கிறார். பல்வேறு சூழல்கள் குறித்த விழிப்புணர்வு சிற்பங்களை அவ்வவ்போது பல்வேறு கடற்கரைகளில் அவர் உருவாக்கி வருகிறார். இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து எச்சரிக்கும் வகையில், இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் அந்த மணல் சிற்பத்தில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த மணல் சிற்பம் வலியுறுத்துகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X