search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை விமான நிலையம்
    X
    மும்பை விமான நிலையம்

    மகாராஷ்டிராவில் மேலும் 198 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு- மும்பையில் மட்டும் 190

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.
    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று 85 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 198 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 450 ஆக உயர்ந்துள்ளது.

    நைஜீரியாவில் இருந்து வந்த 52 வயது நபர் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் ஒமைக்ரான் பாதிப்பினால் மரணம் அடையவில்லை என மாநில சுகாதாரத்துறை கூறி உள்ளது. 
    Next Story
    ×