என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Byமாலை மலர்29 Dec 2021 6:01 PM GMT (Updated: 29 Dec 2021 6:01 PM GMT)
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் இன்று மாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
மிர்ஹமா கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல், அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்...இன்று ஒரே நாளில் 85 பேர்... மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 252 ஆக உயர்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X