என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இன்று ஒரே நாளில் 85 பேர்... மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 252 ஆக உயர்வு
Byமாலை மலர்29 Dec 2021 4:11 PM GMT (Updated: 29 Dec 2021 4:11 PM GMT)
குஜராத்தில் மேலும் 19 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதால், அங்கு மொத்த பாதிப்பு 97 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று மேலும் 85 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 252 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் மேலும் 22 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 68 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதால், அங்கு மொத்த பாதிப்பு 97 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 11 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X