search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    பூஸ்டர் தடுப்பூசி போடுவது சரியான நடவடிக்கை: ராகுல்காந்தி வரவேற்பு

    நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு, அவர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    ஜனவரி 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதை வரவேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்ற எனது யோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது சரியான நடவடிக்கை.

    நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு, அவர்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பூஸ்டர் தடுப்பூசி போடக்கோரி கடந்த 22-ந் தேதி, தான் வெளியிட்ட பதிவையும் இதனுடன் ராகுல்காந்தி இணைத்துள்ளார்.
    Next Story
    ×