என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் 5½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்- 5 பேர் கைது
திருவனந்தபுரம்:
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் சந்தேகத்திற்கு உரிய 4 பேரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில் அவர்கள் ரகசியமாக தங்கம் கடத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர்கள் சென்னையில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்தவர்கள் ஆவர்.
இதில் மூன்று பேரிடம் தலா 335 கிராம் தங்கமும் இன்னொருவரிடம் 1, 500 கிராம் தங்கமும் இருந்தது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதில் ஓருவர் தொடர்ச்சியாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில் ஒரு பெண் 3,250 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பெண் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட பெண் உள்பட 5 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த 575 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இவற்றையும் சேர்த்து மொத்தம் 5 ½ கிலோ கடத்தல் தங்கம் கொச்சி விமான நிலையத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்