என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கழிவறை என தவறாக நினைத்து ஓடும் ரெயிலில் கதவை திறந்த சிறுவன் கீழே விழுந்து பலி
கோட்டையம்:
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், மாம்பாடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சுவேலி-நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மலப்புரம் திரும்பி கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் கோட்டையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரெயில் வந்து கொண்டு இருந்தபோது சித்திக்கின் 10 வயது மகன் முகமது இசான் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து பலியானான்.
சிறுவன் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றான். அவன் திரும்பி வராததைத் தொடர்ந்து அவனை தேடினர். அப்போதுதான் கழிவறை கதவு என தவறாக நினைத்து வெளிக்கதவை திறந்து சிறுவன் கீழே விழுந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் ரெயிலை சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் தண்டவாளம் அருகே தங்கியிருந்தவர்கள் அந்த பகுதியில் தேடியபோதுதான் சிறுவன் முகமது இசான் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டின் கீழ் கிடந்தான்.
உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுவனின் உயிரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்