என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி
Byமாலை மலர்2 Oct 2021 8:54 PM GMT (Updated: 2 Oct 2021 8:54 PM GMT)
சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.
இதனுடன் சேர்த்து, மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக 296 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.
இந்த வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் கடன் தொகை கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த உதவியாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறந்த உதாரணம் நிதின் கட்கரி - சரத் பவார் பாராட்டு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X