என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமரீந்தர்சிங் தனது கருத்துகளை மறுபரிசீலனை செய்வார் - காங்கிரஸ் கட்சி நம்பிக்கை
Byமாலை மலர்24 Sep 2021 8:56 PM GMT (Updated: 24 Sep 2021 8:56 PM GMT)
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா பற்றிய கருத்துகளை அமரீந்தர் சிங் மறுபரிசீலனை செய்வார் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநில முதல் மந்திரி பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் அனுபவமற்றவர்கள். அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், அமரீந்தர் சிங் எங்களை விட மூத்தவர். வயதானவர்கள் அடிக்கடி கோபத்தில் எவ்வளவோ பேசுவார்கள். அவரது கோபம், வயது, அனுபவம் ஆகியவற்றை மதிக்கிறோம். அந்த வார்த்தைகள், அவரது அந்தஸ்துக்கு அழகல்ல. அவர் தனது வார்த்தைகளை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம். அரசியலில் கோபம், பொறாமை, விரோதம், பழிவாங்குதல், தனிப்பட்ட தாக்குதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. அவர் இன்னும் காங்கிரஸ் தலைவர்தான். அவர் கட்சியை விட்டு விலகுவதாக இருந்தால், அதுபற்றி நான் சொல்ல எதுவும் இல்லை என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்....கொரோனா பாதிப்பு: காஷ்மீரில் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X