search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பஞ்சாப் புதிய முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக பஞ்சாப் அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதாக மோடி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் அமரீந்தர் சிங் பதவி விலகினார். 

    இதையடுத்து புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி (வயது58) இன்று பதவியேற்றுள்ளார். முதல்வருடன் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் ஓ.பி. சோனி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுள்ளனர். புதிய முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

    பிரதமர் மோடியும் சரண்ஜித் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக பஞ்சாப் அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதாக மோடி கூறி உள்ளார்.
    Next Story
    ×