search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் முதல்வர்"

    • கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி.
    • கெஜ்ரிவால் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டு நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-

    நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல. ஒன்றுபடுவோம் அல்லது நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார்.

    டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.

    அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை. அவர் அமலாக்கத்துறை காவலில் இருக்கிறார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பார். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.

    அந்த வகையில், இன்று தமிழகத்திற்கு வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் சிங்கும் பங்கேற்றார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " நான் டெல்லி செல்லும்போது அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதுண்டு. டெல்லியில் மாடல் பள்ளி போன்று தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று ஆய்வு செய்தோம். டெல்லி அரசுக்கு ஆளுநர் மூலமாக தொடர் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    மத்திய அரசு டெல்லி அரசுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்" என்றார்.

    பின்னர் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், " டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முழு சுதந்திரம் இல்லையென்றால் அரசை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும்" என்றார்.

    • பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில் பாதுகாப்பு.
    • மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

    சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ஒதுக்கிய நிலையில், பகவந்த் மான் சிங் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பகவந்த் மான் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அமைச்சகத்தின் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் என்றும், மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.
    • வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை

    சண்டிகர்:

    சண்டிகரில் இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4:30 மணியளவில், ஹெலிபேட் மற்றும் பஞ்சாப் முதல்வரின் வீட்டிற்கு அருகிலுள்ள மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு எப்படி அங்கு வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை.
    • சண்டிகர் செக்டார்-2ல் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் முதல்வரின் இல்லத்தின் ஒரு பகுதியாகும்

    சண்டிகர்:

    பஞ்சாப் முதல்வரின் சண்டிகர் இல்லத்திற்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தும்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பட்டாலியன் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஜிந்தர் சிங் பெயரில் சலான் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சி அனுப்பி உள்ள சலானில், 'வீட்டு எண்-7, செக்டார்-2, சண்டிகர்' என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து கூறுகையில், "முதல்வரின் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குப்பைகளை வீட்டுக்கு வெளியே கொட்டுவதாக பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்தனர். குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவுறுத்தியும் கேட்கவில்லை. இதனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.செக்டார்-2ல் 44, 45, 6 மற்றும் 7 ஆகிய எண்கள் முதல்வரின் இல்லத்தின் ஒரு பகுதியாகும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம் ஆத்மி அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது.
    • இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இது தற்போது பஞ்சாப் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் என பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். #CaptAmarinderbatsfor #RahulasPMcandidate
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டத்தில் தேர்தலுக்கு முன்னரும், பிறகும் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 

    பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்தியாவின் மதசார்பற்ற ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாக்கவும், நாட்டு நலன் கருதியும் ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

    தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக மத்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை பின்பற்றி மாநில அமைப்புகள் நடந்து கொள்ள வேண்டும்.

    நாட்டை வழிநடத்த தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ராகுல் காந்தி, நிச்சயமாக வெற்றிகரமான பிரதமராக தன்னை நிரூபித்து காட்டுவார் என்றும் அமரிந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்தார். #CaptAmarinderbatsfor  #RahulasPMcandidate
    ×