search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அமைச்சகத்தின் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
    X

    மத்திய அமைச்சகத்தின் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

    • பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில் பாதுகாப்பு.
    • மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

    சி.ஆர்.பி.எப். படையின் இசட் பிளஸ் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ஒதுக்கிய நிலையில், பகவந்த் மான் சிங் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பகவந்த் மான் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அமைச்சகத்தின் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் என்றும், மாநில போலீசாரின் பாதுகாப்பே போதுமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×