என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
36 ஆண்டுகளாக மரங்கள் நட்டு பராமரிக்கும் ஆசிரியர்
Byமாலை மலர்14 Sep 2021 9:14 AM GMT (Updated: 14 Sep 2021 9:14 AM GMT)
இயற்கையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ரமா மாஸ்திரி தனது சொந்த கிராமத்தை இணைக்கும் 3 சாலைகளில் மரங்களை நட்டு 36 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் பர்கார் மாவட்டம், கங்கான் கிராமத்தை சேர்ந்தவர் ரமா மாஸ்திரி (வயது 77). ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இயற்கையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சொந்த கிராமத்தை இணைக்கும் 3 சாலைகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த பணிகளை அவர் 36 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
3 சாலைகளும் இப்போது சோலைகளாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து புதிது புதிதாக மரங்களை அவர் நட்டு வருகிறார். தற்போது இந்த மரங்களை பராமரிப்பதையே தனது முழு நேர பணியாக கொண்டுள்ளார்.
தினமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார். இதற்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து இருக்கிறார். அருகில் இருக்கும் குட்டைகளில் இருந்து சைக்கிள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து தொட்டிகளில் நிரப்புகிறார். பின்னர் ஒவ்வொரு மரத்துக்கும், செடிக்கும் தண்ணீர் ஊற்றுகிறார்.
ஒடிசா மாநிலம் பர்கார் மாவட்டம், கங்கான் கிராமத்தை சேர்ந்தவர் ரமா மாஸ்திரி (வயது 77). ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இயற்கையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சொந்த கிராமத்தை இணைக்கும் 3 சாலைகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த பணிகளை அவர் 36 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
3 சாலைகளும் இப்போது சோலைகளாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து புதிது புதிதாக மரங்களை அவர் நட்டு வருகிறார். தற்போது இந்த மரங்களை பராமரிப்பதையே தனது முழு நேர பணியாக கொண்டுள்ளார்.
தினமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார். இதற்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து இருக்கிறார். அருகில் இருக்கும் குட்டைகளில் இருந்து சைக்கிள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து தொட்டிகளில் நிரப்புகிறார். பின்னர் ஒவ்வொரு மரத்துக்கும், செடிக்கும் தண்ணீர் ஊற்றுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X