search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை
    X
    வருமான வரித்துறை

    வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

    டெல்லி நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    2021-2022-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருந்தது. கொரோனா தொற்று மற்றும் புதிய இணையதள அறிமுகம் செய்ததற்காக இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த அவகாசம் மீண்டும் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தரப்பிலான கணக்குகள் தாக்கல் செய்யவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவல்களை டெல்லி நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

    Next Story
    ×