என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி நாராயண் ரானே கைதுக்கு ஜே.பி. நட்டா, பட்னாவிஸ் கண்டனம்
Byமாலை மலர்25 Aug 2021 4:53 AM GMT (Updated: 25 Aug 2021 4:53 AM GMT)
ஜன் ஆசீர்வாத் யாத்திரையால் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் மகத்தான ஆதரவால், இவர்கள் சிரமப்படுகிறார்கள்?. ஜனநாயக முறையிலான எங்களது போராட்டம் நீடிக்கும். எங்களது பயணம் தொடரும்.
மும்பை :
மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந்திருப்பேன் என கூறிய மத்திய மந்திரி நாராயண் ரானே அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தல் கூறியிருப்பதாவது:-
மத்திய மந்திரி நாராயண் ரானேவை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இதுபோன்ற நடவடிக்கையால் நாங்கள் பயப்படவோ, அடங்கி போகவோ மாட்டோம்.
ஜன் ஆசீர்வாத் யாத்திரையால் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் மகத்தான ஆதரவால், இவர்கள் சிரமப்படுகிறார்கள்?. ஜனநாயக முறையிலான எங்களது போராட்டம் நீடிக்கும். எங்களது பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "நாராயண் ரானேயின் கருத்துக்கு பா.ஜனதா ஆதரவளிக்கவில்லை. ஆனால் அவருக்கு பக்கபலமாக எங்களது கட்சி 100 சதவீதம் உள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக மாநில போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர். தலீபான் போன்று அராஜகம் செய்யாமல், சட்டம்-ஒழுங்கை பின்பற்றும் அரசாக செயல்பட வேண்டும்" என்றார்.
மராட்டிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "நாராயண் ரானேவின் பேச்சை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர் பேசியதில் வருத்தம் தெரிவிக்கவும் எதுவுமில்லை. நாராயண் ரானேயை குற்றம்சாட்டுபவர்கள், இதற்கு முன் உத்தவ் தாக்கரே பல முறை இதுபோல பேசியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது" என்றார்.
மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந்திருப்பேன் என கூறிய மத்திய மந்திரி நாராயண் ரானே அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தல் கூறியிருப்பதாவது:-
மத்திய மந்திரி நாராயண் ரானேவை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இதுபோன்ற நடவடிக்கையால் நாங்கள் பயப்படவோ, அடங்கி போகவோ மாட்டோம்.
ஜன் ஆசீர்வாத் யாத்திரையால் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் மகத்தான ஆதரவால், இவர்கள் சிரமப்படுகிறார்கள்?. ஜனநாயக முறையிலான எங்களது போராட்டம் நீடிக்கும். எங்களது பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "நாராயண் ரானேயின் கருத்துக்கு பா.ஜனதா ஆதரவளிக்கவில்லை. ஆனால் அவருக்கு பக்கபலமாக எங்களது கட்சி 100 சதவீதம் உள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக மாநில போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர். தலீபான் போன்று அராஜகம் செய்யாமல், சட்டம்-ஒழுங்கை பின்பற்றும் அரசாக செயல்பட வேண்டும்" என்றார்.
மராட்டிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "நாராயண் ரானேவின் பேச்சை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர் பேசியதில் வருத்தம் தெரிவிக்கவும் எதுவுமில்லை. நாராயண் ரானேயை குற்றம்சாட்டுபவர்கள், இதற்கு முன் உத்தவ் தாக்கரே பல முறை இதுபோல பேசியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X