என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய ஆக்கி அணிக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து
Byமாலை மலர்5 Aug 2021 8:52 AM GMT (Updated: 5 Aug 2021 11:14 AM GMT)
இந்திய ஆக்கி அணிக்கு பல்வேறு பிரபலங்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகிறது. இந்த வெண்கல பதக்கத்தால் நாடே குதூகலம் அடைந்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய ஆக்கி அணிக்கு தெரிவித்துள்ள வாழ்த்து வருமாறு:-
“41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய வீரர்கள் மிகவும் திறமையுடன் விளையாடி வெற்றியை பெற்றது அவர்களது உறுதியை காட்டுகிறது.
ஆக்கி சகாப்தத்தில் இது வரலாற்று வெற்றியாகும். இது விளையாட்டு வீரர்களை மேலும் ஊக்குவிக்கும்” என்றார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இது புதிய வரலாறு ஆகும். ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாளாகும்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு முக்கியமான தருணமாகும். உங்கள் சாதனைக்காக நாடு முழுவதும் பெருமை கொள்கிறது. இது ஒரு தகுதியான வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோல பல்வேறு பிரபலங்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகிறது. இந்த வெண்கல பதக்கத்தால் நாடே குதூகலம் அடைந்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய ஆக்கி அணிக்கு தெரிவித்துள்ள வாழ்த்து வருமாறு:-
“41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய வீரர்கள் மிகவும் திறமையுடன் விளையாடி வெற்றியை பெற்றது அவர்களது உறுதியை காட்டுகிறது.
ஆக்கி சகாப்தத்தில் இது வரலாற்று வெற்றியாகும். இது விளையாட்டு வீரர்களை மேலும் ஊக்குவிக்கும்” என்றார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இது புதிய வரலாறு ஆகும். ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாளாகும்.
வெண்கலப்பதக்கத்தை வென்று நாடு திரும்பும் இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு எனது வாழ்த்துகள். இந்த சாதனை மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் முழு நம்பிக்கையை அவர்கள் பெற்று உள்ளனர். நமது ஆக்கி அணியால் நாடு பெருமை கொள்கிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு முக்கியமான தருணமாகும். உங்கள் சாதனைக்காக நாடு முழுவதும் பெருமை கொள்கிறது. இது ஒரு தகுதியான வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோல பல்வேறு பிரபலங்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...ஆக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு - பஞ்சாப் அரசு அறிவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X