என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றத்தில் தொடரும் அமளி... இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
Byமாலை மலர்2 Aug 2021 10:29 AM GMT (Updated: 2 Aug 2021 10:29 AM GMT)
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில் உள்நாட்டு போக்குவரத்து கப்பல்கள் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சனை, டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் உறுப்பினர்களின் இடையூறு காரணமாக முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 2 மணி, 3:30 மணி வரை என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சனை, டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் உறுப்பினர்களின் இடையூறு காரணமாக முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 2 மணி, 3:30 மணி வரை என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில் உள்நாட்டு போக்குவரத்து கப்பல்கள் மசோதா நிறைவேற்றப்பட்டது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை இந்த மசோதா உறுதி செய்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும் 3:36 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X