என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைரஸ் உருமாற்றத்தால் கொரோனா 3-வது அலை வரலாம் - மக்களவையில் சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்
Byமாலை மலர்23 July 2021 8:39 PM GMT (Updated: 23 July 2021 8:39 PM GMT)
நோய் தீவிரத்தையும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதையும், மரணங்கள் ஏற்படுவதையும் தடுப்பதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
வைரசில் ஏற்படும் உருமாற்றத்தால் கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்று மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு கேள்விக்கு எழுத்துமூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
நோய் தீவிரத்தையும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதையும், மரணங்கள் ஏற்படுவதையும் தடுப்பதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதும் எண்ணற்ற கொரோனா அலைகள் உருவாகி வருகின்றன.
வைரசில் ஏற்படும் உருமாற்றத்தாலோ அல்லது எளிதில் நோய் தாக்கக்கூடிய மக்களாலோ 3-வது அலை வரலாம். அதுவும், மருந்துகள் மற்றும் இதர அம்சங்களை பொறுத்து இருக்கிறது.
மற்ற உருமாறிய கொரோனாக்களை விட டெல்டா வைரசால் நோய் பரவும் தன்மை அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரசால் குழந்தைகள் அதிகமாக பாதிப்படைவார்கள் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. குழந்தைகளை தாக்கினாலும், அறிகுறி இல்லாமலோ அல்லது லேசான அறிகுறிகளுடனோ தான் இருப்பார்கள். அவர்களுக்கு தீவிர நோயாக உருவெடுக்காது.
3-வது அலையை தடுக்க கொரோனா பயண பாதையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்குமாறு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறோம். தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதி ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...சச்சின் வாசே நியமனம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம்: மும்பை ஐகோர்ட்டு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X