search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்சுக் மாண்டவியா"

    • கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு.

    இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

     


    "புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்," என்று மந்திரி மாண்டவியா தெரிவித்தார்.

    கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • குளிர்காலம், திருவிழா காலங்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

    இந்தியாவில் மீண்டும் மெல்லமெல்ல கொரோனா தொற்று தலைதூக்கி வருகிறது. குளிர்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் முதியோர் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை வலியுறுத்தியுள்ளார்.

    மன்சுக் மாண்டவியா இதுகுறித்து கூறுகையில் "குளிர்காலத்தின் கடுங்குளிர் மற்றும் வரவிருக்கும் திருவிழாக்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தற்போது இணைந்து பணியாற்றும் நேரம் இது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை. மருத்துவமனைகளை தயார்படுத்தல், கண்காணிப்பு பணியை அதிகரித்தல், மக்களுடன் பயனுள்ள தொடர்பு குறித்து ஒத்திகை நடத்தி தயாராக இருப்பது அவசியம்.

    ஒவ்வொரு மாதத்திற்கும் இடையில் அனைத்து மருத்துவமனையிலும் ஒத்திகை நடத்தப்பட வேண்டும். மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளும் கிடைக்கும் என மாநிலங்களுக்கு உறுதி அளிக்கிறேன். சுகாதாரம் அரசியலுக்கான இடம் அல்ல.

    இவ்வாறு மன்சுக் மாண்டியா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய ஒதுக்கீடு வீணாவதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும்

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு என 15 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தப் 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு பொருத்தவரை 6 இடங்கள் காலியாக இருந்து அது வீணானது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடத்தை நிரப்ப வேண்டும் என தேசிய மருத்துவ துறை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு வீணாவதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    மேலும், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத இட ஒதுக்கீடுகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    • அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான்.
    • நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது, "நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

    அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று மத்திய மந்திரி சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பா.ஜ.க. அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய ஒரு நிறுவனத்தின் மாதிரிகளை பரிசோதித்தோம்.
    • கலப்பட மருந்து விஷயத்தில், சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு, காம்பியா நாட்டில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் மருந்தை பயன்படுத்தியதால் அவர்கள் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    உலகத்துக்கே இந்தியாதான் மருந்தகம். அதுமட்டுமின்றி, தரமான மருந்தகம் என்பதை ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

    அந்தவகையில், இந்திய மருந்துகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டவுடன், அதுபற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள விரும்பினோம். உதாரணமாக, காம்பியா நாட்டில் இந்திய மருந்துகளால் குழந்தைகள் இறந்ததாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த யாரோ ஒருவர் கூறியிருந்தார்.

    அதுபற்றிய உண்மைகளை தெரிவிக்குமாறு அந்த அமைப்புக்கு கடிதம் எழுதினோம். ஆனால் பதில் வரவில்லை.

    இருப்பினும், குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய ஒரு நிறுவனத்தின் மாதிரிகளை பரிசோதித்தோம். அப்போது, குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தது தெரிய வந்தது. வயிற்றுப்போக்கு இருக்கும்போது, இருமல் மருந்தை பரிந்துரைத்தது யார்?

    கலப்பட மருந்து விஷயத்தில், சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது. இந்தியாவில், தரமான மருந்துகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கலப்பட மருந்தால் யாரும் இறக்கக்கூடாது என்று ஒழுங்குமுறை அமைப்புகளை உஷார்படுத்தி வருகிறோம்.

    கலப்பட மருந்து குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதால், 71 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அவற்றில் 18 நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
    • கொரோனா தொற்று குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் என்றார்.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா இன்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தவேண்டும். கொரோனா மேலாண்மைக்கான அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்கவும், கொரோனா தொற்று குறித்து தேவையற்ற பயத்தை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    • இம்மாத தொடக்கம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • இதையடுத்து, மத்திய மந்திரி நாளை காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஒருநாள் கொரோனா நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரு புதிய இந்தியா உருவாகி வருகிறது.
    • பில்கேட்ஸ் இந்தியாவை வெகுவாக பாராட்டி இருந்தார்.

    டேராடூன் :

    உத்தரகாண்டில் ரூ.180 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் 4 சுகாதாரத்துறை திட்டங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அவர் பேசும்போது கூறியதாவது:-

    கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா உள்நாட்டில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது மட்டுமின்றி 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் அந்த நாடுகளும் கொரோனாவை எதிர்த்து போரிட உதவியது.

    இந்த சிறப்பான பங்களிப்புக்காக சர்வதேச அளவில் இந்தியா பாராட்டப்பட்டது. உதாரணமாக, தவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் பில்கேட்ஸ் இந்தியாவை வெகுவாக பாராட்டி இருந்தார்.

    சர்வதேச அளவில் தடுப்பூசி டோஸ் ஒன்று 16, 18, 20 டாலர் என விற்பனையாகி வந்தபோது, நாம் 78 நாடுகளுக்கு வெறும் 3 டாலருக்கு ஏற்றுமதி செய்தோம்.

    நம்மை பொறுத்தவரை ஆரோக்கியம் என்றால் சேவைதான், வர்த்தகமோ, வணிகமோ அல்ல. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற நமது மரபுக்கு ஏற்ப இந்தியாவின் செயல்பாடுகள் இருந்தன.

    பிரதமர் மோடியின் தலைமையில், சுகாதாரத்துறையுடன் முதல்முறையாக வளர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் ஒரு முழுமையான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

    நமக்கு மருத்துவமனைகள் தேவை என்றால், அதை திறம்பட வழிநடத்த டாக்டர்களும் வேண்டும். அதற்கு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும், அதில் உள்ள இடங்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும்.

    கடந்த 2014-ம் ஆண்டில் வெறும் 56 ஆயிரமாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 1.3 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இதைப்போல மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் 350-ல் இருந்து 664 ஆக உயர்ந்துள்ளன.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையும் 6-ல் இருந்து 42 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன.

    ஒரு புதிய இந்தியா உருவாகி வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்றாகும்.

    இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தது.
    • 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ படிப்புக்கான இடங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட எண்ணிக்கையில் மிகவும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்ததாகவும், தற்போது அது 660 ஆக உயர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இது 71 சதவீத உயர்வு ஆகும்.

    இதைப்போல 2014-க்கு முன்பு 51 ஆயிரத்து 348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான இடங்கள் தற்போது 97 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 43 இடங்களாக உயர்ந்துள்ளது.

    இதில் 52 ஆயிரத்து 778 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 48 ஆயிரத்து 265 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களும் 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து உள்ளது. 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, "காலம் மாறியதால் நாடு மாறியது" என குறிப்பிட்டு பெருமைப்பட்டுள்ளார்.

    • சந்திரகுப்த மவுரியரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கிறோம்.
    • நமது வருங்கால சந்ததியினர், தங்கள் தந்தையரும், முன்னோர்களும் மோடியின் ஆதரவாளர்கள்.

    ஆமதாபாத் :

    குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'நமது வரலாறு பாடத்தில் சந்திரகுப்த மவுரியரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கிறோம். இன்றும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் உள்ளது. இதைப்போல அடுத்த தலைமுறைகள், 3-வது, 4-வது தலைமுறைகள் பிரதமர் மோடியின் பொற்காலம் குறித்து படிப்பார்கள். அவர்கள் இந்திய வரலாறு படிக்கும்போது இது கற்பிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் எத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது எதிர்கால தலைமுறைகளுக்கு கற்பிக்கப்படும் என தெரிவித்த மாண்டவியா, நமது வருங்கால சந்ததியினர், தங்கள் தந்தையரும், முன்னோர்களும் மோடியின் ஆதரவாளர்கள் என்றும், மோடி அரசில் அங்கம் வகித்தவர்கள் என்றும் பெருமிதம் கொள்வார்கள் எனவும் கூறினார்.

    மேலும் கொரோனா தொற்று நிர்வாகம், நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், சர்ஜிக்கல் மற்றும் வான்வழி தாக்குதல்கள், இந்தியாவின் வெளியுறவு கொள்கை போன்றவற்றால் உலகமெங்கும் இந்தியா புகழப்படும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    • 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 51 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன.
    • இன்றைக்கு நாம் 1 லட்சத்து 226 மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றிருக்கிறோம்.

    காந்திநகர் :

    குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில், உலகளாவிய இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் 13-வது வருடாந்திர மாநாடு நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் ஒரு புதிய ஆஸ்பத்திரியை திறக்கிறபோது அதற்கு டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள்.

    8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 51 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன. இன்றைக்கு நாம் 1 லட்சத்து 226 மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றிருக்கிறோம்.

    மருத்துவ மேற்படிப்பில் 34 ஆயிரம் இடங்கள் இருந்தன. இப்போது அவை 64 ஆயிரமாக உயர்ந்துள்ளன.

    நாங்கள் மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு இரண்டின் இடங்களும் சம அளவில் இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம். 4 வருடங்களில் இதைச் செய்து முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதைச் செய்து முடித்து விட்டால், மருத்துவ படிப்பு முடிக்கிற அனைவரும், மேற்படிப்பும் படிக்க வாய்ப்பு ஏற்படும்.

    நமது 'இந்தியாவில் குணமாகுங்கள்' திட்டம், உலக நாடுகளில் வாழ்கிறவர்களையெல்லாம் இந்தியாவுக்கு அழைப்பது, மலிவான, தரமான மருத்துவம், ஆரோக்கியம், பாரம்பரிய மருந்துகளை வழங்குவதற்கானது.

    இதற்கான செயல்முறை தொடங்கி இருக்கிறது.

    நீங்கள் சுகாதாரத்துறையில் பணியாற்ற விரும்பினால், சங்கிலித்தொடர்போல ஆஸ்பத்திரிகளை கட்ட விரும்பினால், உங்களுக்கான தொழில் வாய்ப்பை நான் உறுதி செய்ய விரும்புகிறேன்.

    உங்களிடம் 50-100 படுக்கை ஆஸ்பத்திரி இருக்குமானால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அங்கீகாரத்தை பெறுங்கள். நீங்கள் தொழில் வாய்ப்பை அடைய முடியும். மக்களுக்கு சேவை செய்வதற்கு அது ஒரு வாய்ப்பு. நீங்கள் வணிக ரீதியில் நடத்த விரும்பினால், ஆயுஷ்மான்பாரத் திட்டத்தின்கீழ் செயல்படலாம்.

    இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள 'ஹீல் இன் இந்தியா, ஹீல் பை இந்தியா' (இந்தியாவில் குணமாகுங்கள், இந்தியாவால் குணமாகுங்கள்) கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள்- ஆஸ்பத்திரிகள் ஆஸ்பத்திரிகளுக்கு இடையேயும், நாட்டுக்கு நாடு இடையேயும், நாட்டுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐந்து மாநில விவசாயிகளுடன் மத்திய மந்திரி கலந்துரையாடல்.
    • உழவர் பாதுகாப்பு மையங்கள், விவசாயிகளுக்கு உதவி வருகின்றன.

    பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மந்திரி மாண்டவியா பேசியதாவது: 


    விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உழவர் பாதுகாப்பு மையங்கள் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகள் தங்களது வருமானத்தை இருமடங்காக பெருக்கிக் கொள்ளும் வகையில் அவை உதவுகின்றன. 



    உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. உலகளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவிய போதிலும், மத்திய அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×