search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு இடிந்தது (கோப்புப்படம்)
    X
    வீடு இடிந்தது (கோப்புப்படம்)

    மும்பையில் பலத்த மழை- வீடு இடிந்து 2 பேர் பலி

    மும்பை சிவாஜிநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் 10 பேர் சிக்கிக்கொண்டனர்.
    மும்பை:

    மும்பையில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. மும்பையில் கடந்த 18-ந்தேதி மழைக்கு 30 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.

    மும்பை சிவாஜிநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் 10 பேர் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 10 பேரை மீட்டனர். படுகாயம் அடைந்த 7 பேர் ராஜவாடி மருத்துவமனையிலும், 3 பேர் லோக்மானியா திலக் நினைவு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேகா பர்வீஸ் ஷைக் (35), மோகர் ஜபீர் ஷைக் (80) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். படுகாயம் அடைந்த சம்சாத் ஷைக் (45) என்ற பெண் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களில் மற்றவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    Next Story
    ×