என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் பலத்த மழை- வீடு இடிந்து 2 பேர் பலி
Byமாலை மலர்23 July 2021 6:55 AM GMT (Updated: 23 July 2021 6:55 AM GMT)
மும்பை சிவாஜிநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் 10 பேர் சிக்கிக்கொண்டனர்.
மும்பை:
மும்பையில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. மும்பையில் கடந்த 18-ந்தேதி மழைக்கு 30 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
மும்பை சிவாஜிநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் 10 பேர் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 10 பேரை மீட்டனர். படுகாயம் அடைந்த 7 பேர் ராஜவாடி மருத்துவமனையிலும், 3 பேர் லோக்மானியா திலக் நினைவு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேகா பர்வீஸ் ஷைக் (35), மோகர் ஜபீர் ஷைக் (80) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். படுகாயம் அடைந்த சம்சாத் ஷைக் (45) என்ற பெண் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களில் மற்றவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
மும்பையில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. மும்பையில் கடந்த 18-ந்தேதி மழைக்கு 30 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
மும்பை சிவாஜிநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் 10 பேர் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 10 பேரை மீட்டனர். படுகாயம் அடைந்த 7 பேர் ராஜவாடி மருத்துவமனையிலும், 3 பேர் லோக்மானியா திலக் நினைவு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ராஜவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேகா பர்வீஸ் ஷைக் (35), மோகர் ஜபீர் ஷைக் (80) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். படுகாயம் அடைந்த சம்சாத் ஷைக் (45) என்ற பெண் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களில் மற்றவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X