என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை
Byமாலை மலர்19 Jun 2021 8:36 PM GMT (Updated: 19 Jun 2021 8:36 PM GMT)
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதத்தில் நடைபெறும்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கம்போல அடுத்த மாதம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஓம் பிர்லா, பாராளுமன்ற செயலக ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 445 உறுப்பினர்கள் தனியாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்வர்.
தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அமைச்சரவை துணைக்குழுவே இறுதி முடிவு எடுக்கும். மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X