என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் -மத்திய மந்திரி தோமர்
Byமாலை மலர்9 Jun 2021 5:07 AM GMT (Updated: 9 Jun 2021 5:07 AM GMT)
எண்ணெயில் கலப்படம் செய்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதால் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எப்போதும் பேசி உள்ளது. புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்யும் கோரிக்கை தவிர வேறு வழிகள் குறித்து விவாதிக்க விவசாய அமைப்புகள் தயாராக இருந்தால், அவர்களுடன் பேச அரசாங்கம் தயாராக உள்ளது.
மத்திய பிரதேச பாஜக அரசில் நிலையற்ற தன்மை எதுவும் இல்லை. மத்திய பிரதேச அரசு கொரோனா சூழ்நிலையை சரியாக கையாளுகிறது. முதல்வர் சவுகான் மாற்றப்படுவார் என்று வெளியாகும் தகவல் உண்மை அல்ல. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, முதல்வர் யார் என்பதை பாஜகவே தீர்மானிக்கும். பாஜக முதல்வர் பற்றி பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை.
எண்ணெயில் கலப்படம் செய்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதால் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த முடிவு விவசாயிகளுக்கு பயனளிக்கும். சமையல் எண்ணெய்களின் விலைகள் குறித்து அரசாங்கம் கவனித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X