என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் கொரோனா உயிரிழப்பு 1 லட்சத்தை தாண்டியது
Byமாலை மலர்7 Jun 2021 2:30 AM GMT (Updated: 7 Jun 2021 2:30 AM GMT)
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதாவது நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் சுமார் 3-ல் ஒருவர் மராட்டியத்தை சேர்ந்தவராக உள்ளார்.
மும்பை :
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக மாநிலத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதாவது நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் சுமார் 3-ல் ஒருவர் மராட்டியத்தை சேர்ந்தவராக உள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 233 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு 1 லட்சத்து 130 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரசுக்கு 1 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது மாநில மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக மாநிலத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதாவது நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் சுமார் 3-ல் ஒருவர் மராட்டியத்தை சேர்ந்தவராக உள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 233 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு 1 லட்சத்து 130 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரசுக்கு 1 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது மாநில மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் தொற்று பாதிப்பு கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 12 ஆயிரத்து 557 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 லட்சத்து 31 ஆயிரத்து 781 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 55 லட்சத்து 43 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துவிட்டனர்.
தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 85 ஆயிரத்து 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 13 லட்சத்து 46 ஆயிரத்து 389 பேர் வீடுகளிலும், 6 ஆயிரத்து 426 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 95.05 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.72 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X