search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மே மாதத்தில் போடப்பட்ட தடுப்பூசிகள் பற்றி வெளியான தகவல் தவறானது - மத்திய அரசு விளக்கம்

    மே மாதத்தில் 7 கோடியே 90 லட்சம் தடுப்பூசி கிடைத்ததில், 5 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள்தான் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் போடப்பட்டுள்ளன என தகவல் வெளியானதாக தெரிகிறது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது, ஆனால் மே மாதத்தில் 7 கோடியே 90 லட்சம் தடுப்பூசி கிடைத்ததில் 5 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள்தான் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் போடப்பட்டுள்ளன என சில ஊடகங்களில் தகவல் வெளியானதாக தெரிகிறது.

    இது தவறான தகவல், அடிப்படையற்றது என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு:-

    கோப்புப்படம்


    * மே 1 முதல் 31 வரையில், 6 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் மாநில அரசுகளாலும், யூனியன்பிரதேசங்களாலும் போடப்பட்டுள்ளன.

    * மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பாக 1 கோடியே 62 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன.

    * 7 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

    இவ்வாறு அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
    Next Story
    ×