என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் வணிக வளாகங்களை தவிர்த்து எல்லா கடைகளையும் திறக்க அனுமதி
Byமாலை மலர்1 Jun 2021 2:02 AM GMT (Updated: 1 Jun 2021 2:02 AM GMT)
வணிக வளாகம், ஷாப்பிங் சென்டர்கள் தவிர்த்து தனியாக உள்ள அத்தியாவசியமற்ற அனைத்து கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மும்பை, :
மராட்டியத்தில் வருகிற 15-ந் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளையும் நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி உத்தரவ் தாக்கரே அறிவித்தார். அப்போது காலை 7 மணி முதல் 11 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்ட காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் தனிக்கடைகளை திறப்பது குறித்து அந்தந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் முதல்-மந்திரி அறிவித்தார்.
இந்தநிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மும்பை, புனேயில் அனைத்து வகையான கடைகளையும் திறக்க மாநகராட்சி நிர்வாகங்கள் அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வணிக வளாகம், ஷாப்பிங் சென்டர்கள் தவிர்த்து தனியாக உள்ள அத்தியாவசியமற்ற அனைத்து கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இதில் சாலையின் ஒருபுறத்தில் உள்ள கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், மறுபுறத்தில் உள்ள கடைகள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் திறக்க வேண்டும். இந்த உத்தரவு வருகிற 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல புனேயிலும் அனைத்து வகையான தனிக்கடைகளையும் இன்று முதல் 10 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இதில் மதுக்கடைகளும் அடங்கும்.
பொது மக்கள் பிற்பகல் 3 மணிக்கு மேல் அத்தியாவசியம் இல்லாத தேவைகளுக்காக வெளியே சுற்றக்கூடாது எனவும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.
நாசிக்கில் வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகளை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கபட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
இதபோல நாக்பூரிலும் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
கடைகளில் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
மராட்டியத்தில் வருகிற 15-ந் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளையும் நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி உத்தரவ் தாக்கரே அறிவித்தார். அப்போது காலை 7 மணி முதல் 11 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்ட காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் தனிக்கடைகளை திறப்பது குறித்து அந்தந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் முதல்-மந்திரி அறிவித்தார்.
இந்தநிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மும்பை, புனேயில் அனைத்து வகையான கடைகளையும் திறக்க மாநகராட்சி நிர்வாகங்கள் அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வணிக வளாகம், ஷாப்பிங் சென்டர்கள் தவிர்த்து தனியாக உள்ள அத்தியாவசியமற்ற அனைத்து கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இதில் சாலையின் ஒருபுறத்தில் உள்ள கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், மறுபுறத்தில் உள்ள கடைகள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் திறக்க வேண்டும். இந்த உத்தரவு வருகிற 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல புனேயிலும் அனைத்து வகையான தனிக்கடைகளையும் இன்று முதல் 10 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இதில் மதுக்கடைகளும் அடங்கும்.
பொது மக்கள் பிற்பகல் 3 மணிக்கு மேல் அத்தியாவசியம் இல்லாத தேவைகளுக்காக வெளியே சுற்றக்கூடாது எனவும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது.
நாசிக்கில் வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகளை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கபட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
இதபோல நாக்பூரிலும் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
கடைகளில் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X