என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் -மத்திய மந்திரி தகவல்
Byமாலை மலர்28 May 2021 10:17 AM GMT (Updated: 28 May 2021 10:17 AM GMT)
தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் காந்தி அக்கறை கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது கவனம் செலுத்தவேண்டும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் மற்றும் மரணங்களுக்கு பிரதமர் மோடி பொறுப்பு என்றும், கொரோனாவின் தீவிரத்தை பிரதமர் புரிந்துகொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மேலும், 130 கோடி மக்கள் கொண்ட நாட்டில், வெறும் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டுக்குள் (2021) நிறைவடையும். தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் காந்தி அக்கறை கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது அவர் கவனம் செலுத்தவேண்டும். அந்த மாநிலங்களில் மே 1 முதல் 18-44 வயதுடைய பயனாகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை அவர்கள் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X