என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தனர்
Byமாலை மலர்28 May 2021 3:15 AM GMT (Updated: 28 May 2021 3:15 AM GMT)
மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 98 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர். மேலும் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தனர்.
மும்பை :
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் வரை 91 ஆயிரத்து 341 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு தாய், தந்தையை இழந்த குழந்தைகளை அடையாளம் காண மாநில அரசு 36 மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவை அமைத்து உள்ளது.
இந்த குழு வைரஸ் நோய்க்கு தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வாழ்விடங்களை ஏற்பாடு செய்தல், சரியான நபர்களிடம் அந்த குழந்தைகள் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் இதுபோன்ற குழந்தைகள் சட்டவிரோத கும்பல் கைகளில் சிக்குவதை தடுக்க அரசு உதவி எண்ணையும் அறிமுகம் செய்து உள்ளது.
இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனாவுக்கு 1,572 குழந்தைகள் பெற்றோரை இழந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள தகவலில் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்து இருப்பதாகவும், 98 குழந்தைகள் தாய், தந்தை என 2 பேரையும் இழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தாய், தந்தை 2 பேரையும் இழந்த குழந்தைகளில் கவனிக்க யாரும் இல்லாத 10 குழந்தைகளை தங்கள் வசம் வைத்திருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் வரை 91 ஆயிரத்து 341 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு தாய், தந்தையை இழந்த குழந்தைகளை அடையாளம் காண மாநில அரசு 36 மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவை அமைத்து உள்ளது.
இந்த குழு வைரஸ் நோய்க்கு தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வாழ்விடங்களை ஏற்பாடு செய்தல், சரியான நபர்களிடம் அந்த குழந்தைகள் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் இதுபோன்ற குழந்தைகள் சட்டவிரோத கும்பல் கைகளில் சிக்குவதை தடுக்க அரசு உதவி எண்ணையும் அறிமுகம் செய்து உள்ளது.
இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனாவுக்கு 1,572 குழந்தைகள் பெற்றோரை இழந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள தகவலில் 1,474 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்து இருப்பதாகவும், 98 குழந்தைகள் தாய், தந்தை என 2 பேரையும் இழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தாய், தந்தை 2 பேரையும் இழந்த குழந்தைகளில் கவனிக்க யாரும் இல்லாத 10 குழந்தைகளை தங்கள் வசம் வைத்திருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X