என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா 123 நாடுகளுக்கு மருந்து உதவிகள் வழங்கியுள்ளது - மத்திய மந்திரி ஹா்ஷ்வா்தன்
Byமாலை மலர்28 May 2021 12:44 AM GMT (Updated: 28 May 2021 12:44 AM GMT)
இந்தியா 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகம் செய்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அமைப்பு சாரா நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தன் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் பங்கேற்றிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் அமைச்சா் ஹா்ஷ்வா்தன் பேசியதாவது:
கொரோனா சூழலில் இந்தியாவுக்கான தேவை அதிகமாக இருந்தும், 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகத்தை உறுதி செய்துள்ளோம். அதில் 59 நாடுகள் அமைப்பு சாராத நாடுகளாகும்.
உலக அளவிலான கொரோனா தொற்று சார்ந்த பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி நடவடிக்கைகளில் இந்தியா மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எல்லோருக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வரை, ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணா்ந்திருக்கிறோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X