search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கடினமான சூழலுக்கு இடையிலும் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள்- பிரதமர் மோடி பாராட்டு

    கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளுக்கும் எதிராக நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

    * கடினமான சூழலுக்கு இடையிலும் அதிகாரிகள் தங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றனர்.

    * கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி வரும் நீங்கள் அனைவரும் இந்த போரின் களதளபதிகள்.

    * கொரோனா 2வது அலையில் நாம் ஊரகப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    * நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சவால்கள்  உள்ளன.

    * கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் ஆயுதம்.

    கொரோனா தடுப்பூசி

    * கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளுக்கும் எதிராக நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும்.

    * கொரோனா தடுப்பூசி விநியோகத்தை பெரிய அளவில் அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×