என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோலார் அருகே சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் திடீர் கைது
Byமாலை மலர்18 May 2021 2:13 AM GMT (Updated: 18 May 2021 2:13 AM GMT)
கோலார் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி சுப்ரியா, லலிதா 2 பேரையும் திருமணம் செய்தது கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் குறித்து ஏராளமான கருத்துகள் வலம் வந்தன.
கோலார் :
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி(வயது 30). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமிக்கு சுப்ரியா(20) என்ற அக்காள் உள்ளார்.
ஆனால் வாய் பேச முடியாத மாற்று திறனாளியான சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் உமாபதியிடம் அந்த சிறுமி தன்னையும், அக்காளையும் திருமணம் செய்து கொள்ள கேட்டு உள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி நேற்று முன்தினம் ஒரே மேடையில் 2 பேரையும் திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணம் கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் குறித்து ஏராளமான கருத்துகள் வலம் வந்தன.
இந்த நிலையில் சகோதரிகளை உமாபதி திருமணம் செய்தது பற்றி அறிந்த முல்பாகல் தாலுகா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரமேஷ் நேற்று வேகமடுகு கிராமத்திற்கு சென்றார்.
அங்கு சுப்ரியா மற்றும் அவரது தங்கையின் பிறப்பு சான்றிதழை வாங்கி பார்த்தார். அதில் சுப்ரியா தங்கைக்கு 17 வயது ஆவது தான் தெரிந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி மீது ரமேஷ் முல்பாகல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமாபதியை கைது செய்தனர்.
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி(வயது 30). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமிக்கு சுப்ரியா(20) என்ற அக்காள் உள்ளார்.
ஆனால் வாய் பேச முடியாத மாற்று திறனாளியான சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் உமாபதியிடம் அந்த சிறுமி தன்னையும், அக்காளையும் திருமணம் செய்து கொள்ள கேட்டு உள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி நேற்று முன்தினம் ஒரே மேடையில் 2 பேரையும் திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணம் கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் குறித்து ஏராளமான கருத்துகள் வலம் வந்தன.
இந்த நிலையில் சகோதரிகளை உமாபதி திருமணம் செய்தது பற்றி அறிந்த முல்பாகல் தாலுகா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரமேஷ் நேற்று வேகமடுகு கிராமத்திற்கு சென்றார்.
அங்கு சுப்ரியா மற்றும் அவரது தங்கையின் பிறப்பு சான்றிதழை வாங்கி பார்த்தார். அதில் சுப்ரியா தங்கைக்கு 17 வயது ஆவது தான் தெரிந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி மீது ரமேஷ் முல்பாகல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமாபதியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X