என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆக்சிஜன் பற்றாக்குறை, அதிகரிக்கும் மரணங்கள்... மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Byமாலை மலர்23 April 2021 9:12 AM GMT (Updated: 23 April 2021 9:12 AM GMT)
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதுடன், தினசரி உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை உக்கிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதுடன், தினசரி உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதுதவிர, ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆக்சிஜன் சப்ளையை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிப்பு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மத்திய அரசே பொறுப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா தாக்கினால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். ஆனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் போதிய படுக்கையில்லாத காரணங்களால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு மத்திய அரசே பொறுப்பு” என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X