என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்ய 5 லட்சம் பேர் டுவிட்டரில் பதிவு
புதுடெல்லி:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பு தற்போது 1.5 லட்சத்தை தாண்டி உள்ளது.
இதைதொடர்ந்து மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வை நடத்தும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யக் கோரி சமூக வலை தளமான டுவிட்டரில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாணவ- மாணவிகளும் இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இதுவரை 5 லட்சம் பேர் சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்யக் கோரி டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.
1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுவும் மத்திய தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்