என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தடுப்பூசி போட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? புதிய வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிடுகிறது
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் ஊசி போட்டுக் கொண்ட பிறகு ஒரு சிலருக்கு சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கடுமையான உடல்சோர்வு, காய்ச்சல், ஒவ்வாமை, மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, காலில் வீக்கம், அடிவயிற்றில் வலி, நரம்பு தளர்ச்சி, கடுமையான தலைவலி, ஊசி போட்ட இடத்தில் ரத்த உறைவு போன்றவை ஏற்படுகின்றன. இதில் சுமார் 700 பேர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற மருத்துவ வழிகாட்டுதல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனவே ஊசி போட்டுக்கொண்ட பிறகு என்ன செய்ய வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்க உள்ளது.
இதற்காக ஆய்வு செய்வதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பிறகு புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்