search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் ஆரிப் முகமது கான்
    X
    சபரிமலையில் ஆரிப் முகமது கான்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வழிபாடு

    விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    பங்குனி மாத பூஜை மற்றும் ஆறாட்டு விழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ம் தேதி திறக்கப்பட்டது. 19-ம் தேதி பங்குனி ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் விழா கோலாகலமாக நடந்தது. நிறைவாக 28-ம் தேதி ஆறாட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது.

    விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    நேற்று வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாமி தரிசனம் செய்தார். 
    Next Story
    ×